தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்!



  30 வயதான தாய்லாந்துப் பெண் சென்வே யி தன்னைத் தானே மணந்து கொண்டதாக அறிவித்துள்ளார்.

தாய்பேயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 30 பேரை அழைத்து திருமண விருந்து கொடுத்து தன்னைத் தானே மணந்து கொண்டதாக அவர் அறிவித்துள்ளார்.

என்னை நானே மணந்து கொள்வது எனக்குள்ள நம்பிக்கையைப் புலப்படுத்துகின்றது. என்னை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன் என்பதையும் அது காட்டுகின்றது. மற்றவர்கள் மீது நாம் அன்புசெலுத்துவதற்கு முன் எம்மீது நாம் அன்பு காட்டவேண்டும்.

அந்தவகையில் விஷேடமான ஒருவரை மணக்கமுன் என்னை நான் மணந்து கொள்கிறேன்” என்று அவர் கூறினார். இது ஒரு ஆக்கபூர்வமான செயல் என்று அவரின் நண்பர்கள் பாராட்டியுள்ளனர்.

இவரைப் பின்பற்றி இன்னும் சிலர் கூட்டமாக தம்மைத் தாமே மணக்கவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துப் பெண்கள் இப்போது மிகவும் வயது சென்ற பின்பே திருமணம் செய்ய விரும்புகின்றனர் அல்லது தனியாகவே வாழ விரும்புகின்றனர்.


இதனால் அந்த நாட்டின் பிறப்பு வீதம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த பிறப்பு வீதமுள்ள நாடாக அந்த நாடு மாறியுள்ளது என்றும அதிகாரிகள் தெரிவித்துள்னர்.


அனுப்பியவர் சந்தோஷ்
source http://tamilcnn.com

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...